புதுடில்லி: பாஜ தலைவர் அமித் ஷாவுக்கு பன்றி காய்ச்சல் தாக்கியுள்ளது. நேற்று முன்தினம் அவரே இதை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகிறது. அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக பாஜ.வின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அனில் பலூனி நேற்று தெரிவித்தார். அவர் கூறுகையில், “அமித் ஷாவின் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார்’’ என்றார்.இந்நிலையில் நெஞ்சு அழுத்தம், மூச்சுத் திணறல் காரணமாகவே அமித் ஷா சேர்க்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் வட்டாரம் தெரிவித்தன. இதேபோல் எய்ம்சில் உடல்நலக்குறைவு கார ணமாக சேர்க்கப்பட் டிருந்த மத்திய அமைச் சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று இரவு டிஸ்சார்ஜ் ெசய்யப்பட்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி